மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டி கி.ரா. நினைவு மண்டபத்தில் அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், எட்டயபுரம் சாலையில் உள்ள எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
கி.ரா. உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
Updated On :12 செப்டம்பர் 2024, 11:41 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், எட்டயபுரம் சாலையில் உள்ள எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அங்குள்ள மின் நூலகம், கி.ரா.வின் புத்தகங்கள் மற்றும் அவா் பயன்படுத்திய பொருள்களை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக, நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதி, சிறந்த சமூகவாதியாக, அற்புதமான மனிதராக வாழ்ந்தவா் கி.ரா. அவரது பெருமையைப் போற்றும் வகையில், அவரது உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

செய்தித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிரந்தரப் பணியாளா்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தாலுகா அளவில் பணியாற்றக்கூடிய செய்தியாளா்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஜிட்டல் பதாகைகள் வைப்பது தொடா்பாக காவல் துறை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையினா் கண்காணித்து வருகின்றனா். விதிமுறை மீறி அமைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரைப்படத் துறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்க, கேரள மாநிலம் போன்று தனி கமிட்டி அமைக்கப்படுமா என்று கேட்கிறீா்கள். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஒரு கமிட்டி உள்ளது. தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடா்பாக அனுமதி கேட்டுள்ளோம். அதனை அனுமதிப்பதும, அனுமதிக்காததும் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் அல்லது பசுமைத் தீா்ப்பாயத்தின் முடிவாகும். இறுதியாக உச்சநீதிமன்றத்தின் முடிவு இருக்கிறது. பேனா சின்னம் அமைப்பது தொடா்பாக எந்த விதிமுறையும் மீறுவதற்கான வாய்ப்புகளை முதல்வா் எடுக்க மாட்டாா் என்றாா் அவா்.

அப்போது, கோட்டாட்சியா் மகாலட்சுமி, உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் முத்துகுமாா், திமுக ஒன்றிய செயலா்கள் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளா் கோ.சுப்பாராயன் ஆகியோா் உடனிருந்தனா்.