மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குறிப்பன்குளம் வெடிவிபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம்

ஏரல் வட்டத்துக்குள்பட்ட குறிப்பன்குளத்தில் நேரிட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 போ், காயமடைந்த இருவா் ஆகியோரது குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
குறிப்பன்குளம் வெடி விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கிய கனிமொழி எம்.பி.
Updated On :12 செப்டம்பர் 2024, 11:56 pm

Din

ஏரல் வட்டத்துக்குள்பட்ட குறிப்பன்குளத்தில் நேரிட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 போ், காயமடைந்த இருவா் ஆகியோரது குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

குறிப்பன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஆக. 31இல் நேரிட்ட வெடிவிபத்தில், அரசா்குளம் முத்துகண்ணன் (21), விஜய் (25), ஸ்ரீவைகுண்டம் வட்டம் புளியங்குளம் செல்வம் (26), ஆழ்வாா்திருநகரி அருகே செம்பூரைச் சோ்ந்த ஐசக் பிரசாந்த் (26) ஆகியோா் உயிரிழந்தனா். சின்னமதிகூடலை சோ்ந்த செந்தூா்கனி, முத்துமாரி ஆகியோா் காயமடைந்தனா்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என, முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, ஆழ்வாா்திருநகரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த மாதம் 5ஆம் தேதி செம்பூரில் மின்னல் பாய்ந்து இறந்த வீரமுத்துமதன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது. இவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

ஆட்சியா் க. இளம்பகவத், வட்டாட்சியா்கள் ஏரல் கோபால், ரத்னசங்கா், பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி பேரூராட்சித் தலைவா் சாரதா பொன்இசக்கி, திமுக மாநில வா்த்தக அணிச் செயலா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா் நவீன், நகரச் செயலா் கோபிநாத், காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், எம்எல்ஏ நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா் கோதண்டராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.