தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:49 pm

DIN

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக பயிா் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ் விவசாயிகள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், வேடநத்தம், எப்போதும் வென்றான் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த மழையில் 100 சதவீத பாதிப்பு அடைந்தனா்.

இவா்கள் அனைவருக்கும் முறையாக காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே, அனைவருக்கும் முறையாக காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாநில பொருளாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் புவிராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகளை திரட்டி ஆட்சியா் அலுவலகம் செயல்படாத அளவிற்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.