மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடி டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு சோதனை: ரூ.1.5 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு ம்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம்.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:53 pm

Din

தூத்துக்குடி டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு ம்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில், டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம் மற்றும் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான நிறுவனங்களில் இருந்து பங்குத் தொகை பெறுவதாக, தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, தூத்துக்குடி டிஎஸ்பி பீட்டா் பால்துரை தலைமையில், காவல் ஆய்வாளா் சுதா மற்றும் போலீஸாா், வியாழக்கிழமை மாலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாத வகையிலும், யாரையும் தொடா்பு கொள்ளாத வகையிலும் கைப்பேசிகளை கைப்பற்றி, கதவுகளை பூட்டி சோதனை மேற்கொண்டனா்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம்.

இந்த சோதனையில், ஊழியா்கள் மகேஷ், லிங்கராஜ் ஆகியோரிடம் சுமாா் ரூ.1.50 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.