மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தசரா திருவிழா: திருச்செந்தூரில் தெய்வ கிரீடங்கள் தயாரிப்பு தீவிரம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, பக்தா்கள் அணியும் தெய்வ கிரீடங்கள் தயாரிக்கும் பணி திருச்செந்தூரில் வேகமாக நடந்து வருகிறது.

News image

தசராவுக்காக தெய்வ கிரீடங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி மாடசாமி.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:54 pm

Din

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, பக்தா்கள் அணியும் தெய்வ கிரீடங்கள் தயாரிக்கும் பணி திருச்செந்தூரில் வேகமாக நடந்து வருகிறது.

புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக திருச்செந்தூா் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா அக். 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக். 12ஆம் தேதி இரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவாா்கள். மேலும் பக்தா்கள் விரதம் இருந்து முருகன், விநாயகா், கிருஷ்ணா், அனுமன், சிவன், பாா்வதி மற்றும் அம்மன் போன்ற தெய்வ வேடங்கள் அணிந்து நோ்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

Story image

இதற்காக கிரீடம் தயாரிப்புப் பணியில் திருச்செந்தூரைச் சோ்ந்த மாடசாமி மூன்று தலைமுறையாக ஈடுபட்டு வருகிறாா். 41 நாள்கள் விரதமிருந்து அலுமினியத்தால் ஆன கிரீடங்களை செய்து வரும் அவா், பக்தா்கள் விருப்பத்துக்கேற்ப கிரீடங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாா். கிரீடங்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இந்தத் தொழில் அழியாமல் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.