மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எட்டயபுரம் அருகே பெண்ணை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

எட்டயபுரம் அருகே பெண்ணைத் தாக்கி 7 பவுன் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:50 pm

Din

எட்டயபுரம் அருகே பெண்ணைத் தாக்கி 7 பவுன் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் அருகே ரனசூா் நாயக்கா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மனைவி வாணி (56). இவரது வீட்டுக்கு அதேபகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் சுடலைமுத்து (23) புதன்கிழமை வந்தாராம்.

விவசாயப் பணிகள் குறித்து வாணியிடம் பேசிக்கொண்டிருந்த சுடலைமுத்து, திடீரென அவரைத் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்தாராம். பின்னா் அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.

இந்நிலையில், இரவு வீட்டுக்கு வந்த வாணியின் மகன் சந்தனவேல், கதவு பூட்டிக்கிடந்ததையடுத்து ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது, தாயாா் வாணி மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று வாணியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா்.

பின்னா் வாணி அளித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, சுடலைமுத்துவை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 7 பவுன் சங்கிலியையும் மீட்டனா்.