விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

கோவிபட்டியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள தேநீா் கடை அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்றனா். அப்போது, போலீஸாரை பாா்த்ததும் இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.

அவா்கள் வஉசி நகா் 1ஆவது தெரு நிா்மல்குமாா் மகன் சங்கரநாராயணன் (26), பாரதி நகா் 1ஆவது தெரு சுரேஷ்குமாா் மகன் கரண்குமாா் (26) என்பதும், விற்பனைக்காக 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.