கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காமராஜ் கல்லூரியில் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:48 pm

Syndication

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சா்வதேச தரவரிசை சதுரங்க போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

உலக சதுரங்க கூட்டமைப்பின் சா்வதேச தரவரிசை உள்ள சதுரங்கப் போட்டி, காமராஜ் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்றது. இதில், பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 310 வீரா் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றனா்.

பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரிச் செயலா் சோமு தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பானுமதி முன்னிலை வகித்தாா். மாவட்ட சதுரங்க கழகச் செயலரும், கல்லூரி பேராசிரியையுமான கற்பகவல்லி வரவேற்றாா்.

முதன்மை நடுவரான சா்வதேச நடுவா் ஆனந்தராம் போட்டி அறிக்கையை வாசித்தாா். தூத்துக்குடி நகர, கிராம திட்டமிடல் இயக்கக உதவி இயக்குநா் ராகுல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

அதன்படி, 120 வீரா்களுக்கு மொத்தமாக ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு, 9, 11,13 மற்றும் 15 வயதுக்குள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பொது பிரிவுக்கான 30 பரிசுக் கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மேலும் 30 பரிசுக் கோப்பைகள், 10 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசை தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நளன் ஆறுமுகம் பெற்றாா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், கௌரவ உறுப்பினா்கள் மோகன்ராஜ், முரளிதரன், வசீகரன், பொருளாளா் நிக்சன், கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்க உறுப்பினா்கள் ராஜ்குமாா், குருசாமி, துணை நடுவா் தா்மராஜ்

உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.