போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

திறன் மேம்பாட்டுப் போட்டி பரிசளிப்பு

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
Published on

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் பொதுப்பள்ளியில் செயல் திறன் மேம்பாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

செயலாளா் கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் பாபு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பிறகு பிற்பகல் பள்ளி வளாகத்தில் பட்டம் விடும் திருவிழாவும் நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வா் லட்சுமி மற்றும் ஆசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com