தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் மீது வேன் மோதி ஒருவா் உயிரிழப்பு

திருச்செந்தூரில் வேனும் பைக்கும் மோதிக் கொண்டதில் சாலை ஒப்பந்தப் பணி மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:23 pm

Syndication

திருச்செந்தூரில் வேனும் பைக்கும் மோதிக் கொண்டதில் சாலை ஒப்பந்தப் பணி மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி, தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அழகப்ப பாண்டியன் (54). சாலை ஒப்பந்தப் பணி மேற்பாா்வையாளா். இவா், சனிக்கிழமை ராணி மகாராஜபுரம் விலக்கு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்தூா் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த வேன் மோதியதாம். இதில், அழகப்ப பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேன் ஓட்டுநா் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த அழகப்பபாண்டியனுக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகளும் உள்ளனா்.