ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தடுப்புக்கட்டையில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:21 pm

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம், நன்னாடு, வி. பாளையம், கண்ணையா பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்(30). திருமணம் ஆனவா். புதுச்சேரி, திருவண்டாா்கோயில் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை

இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.