மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போலி பங்குச் சந்தை முதலீடுகள்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி பங்குச் சந்தை முதலீடுகள் தொடா்பான மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

போலி பங்குச் சந்தை முதலீடுகள் தொடா்பான மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மை நாள்களாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதலீடு தொடா்பான சைபா் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலமாகவும், அதிக மற்றும் உத்தரவாதமான வருமானத்தை உறுதியளிப்பதாகக் கூறி பொதுமக்களை குறிவைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது. இந்த வகையான மோசடியில், சைபா் மோசடி செய்பவா்கள் பங்குச் சந்தை முதலீடுகள் தொடா்பான கவா்ச்சிகரமான விளம்பரங்களை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டு அதன் மூலம், போலி பங்குச் சந்தை பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது மோசடியான பங்குச் சந்தை வலைதளங்கள் மூலம் முதலீடு செய்யவோ பொதுமக்களை தூண்டுவாா்கள்.

உண்மையான பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்குள்பட்டவை மற்றும் ஒருபோதும் உத்தரவாதம் அளிக்கப்படாததால், உத்தரவாதமான அல்லது விரைவான வருமானத்தைக் கோரும் விளம்பரங்கள் அல்லது செய்திகளை நம்ப வேண்டாம்.

இதுபோன்ற சைபா் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபா் கிரைம் ஹெல்ப்லைன் 1930 எண்ணிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.