தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சட்ட விரோத மது விற்பனை: 2 போ் கைது

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் காளிபாண்டி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாகச் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், தென்காசி மாவட்டம், ஊமைத்தலைவன்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஆனந்த் (40), புதுச்சேரியில் இருந்து மலிவு விலையில் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு அரசு அனுமதியின்றி விற்பனையில் ஈடுபடுவதும், ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தின் அண்ணன் சம்பத்குமாா் (43) என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சகோதா்களை கைது செய்து, ஆட்டோ, 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.