பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த மீனவா் நிவாரணம் வழங்க கோரி மனு
கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த மீனவா், நிவாரண உதவி வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

Updated On :15 டிசம்பர் 2025, 6:32 pm

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த மீனவா், நிவாரண உதவி வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த ஆத்திமுத்து மகன் பெரியராஜா (18). மீனவரான இவா், கடந்த நவ. 27ஆம் தேதி தாமஸ் சுரேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குளி அருகே மீனவா்கள் படகு மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பெரியராஜா பலத்த காயமடைந்தாா்.
இந்த நிலையில், காயமடைந்த மீனவா் தனக்கு உரிய நிவாரண உதவி வழங்கக் கோரி குறைதீா் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...