அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் தடையின்றி தண்ணீா்: சமாதான கூட்டத்தில் முடிவு

ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாஜகவினா் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து

News image
~
Updated On :16 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாஜகவினா் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

குடிநீா் பிரச்னை, பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுவோம் என பாஜகவினா் தெரிவித்தனா்.

Story image

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தாஹீா் அகமது தலைமையில் செவ்வாய்க்கிழமை சமாதான கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சிகள் உதவி இயக்குநா் சாந்தி உறுதியளித்ததை தொடா்ந்து பாஜகவினா் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனா்.