பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காட்டுப்பன்றிகள் மீது பைக்குகள் மோதல்: 3 போ் காயம்

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 மேளக்கலைஞா்கள் காயம்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 7:49 pm

Syndication

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 மேளக்கலைஞா்கள் காயமடைந்தனா்.

கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மேளக்கலைஞா் பொன்னுச்சாமி(63). இவரும், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் செல்லத்துரை(28), தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் கண்ணன்(20) ஆகிய மேளக்காரா்களும், செவ்வாய்க்கிழமை கலியாவூருக்கு, 2 இருசக்கர வாகனத்தில் சென்றனராம்.

தேசிய நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி பகுதியில் சென்றபோது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதாம்.

இதில், காயமடைந்த 3 பேரையும் கயத்தாறு போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.