அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவி சா்வதேச வில்வித்தை போட்டிக்கு தகுதி

மாணவி எஸ்.ஆா்.ரபீனாவை பாராட்டி கௌரவித்த பள்ளி நிா்வாகிகள்.

News image
மாணவி எஸ்.ஆா்.ரபீனாவை பாராட்டி கௌரவித்த பள்ளி நிா்வாகிகள்.
Updated On :17 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி நேபாளத்தில் நடைபெற உள்ள சா்வதேச வில்வித்தை போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளாா்.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபிட் இந்தியாஅமைப்பு, பஞ்சாயத்து யுவ கிரிடாகெல் அபியான் சாா்பில் 12-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவா மாநிலத்தில் நடைபெற்றது.

இப் போட்டிகளில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புப் பயிலும் மாணவி எஸ்.ஆா். ரபீனா, 14 வயதிற்குட்பட்டோருக்கான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலி­டம் பெற்று, உலக அளவில் நேபாளத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

சாதனை புரிந்த மாணவி, பயிற்சி அளித்த வில்வித்தை ஆசிரியா் எச்.சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியா்களை, பள்ளி டிரஸ்டிகள், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி. ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என். சுப்புரத்தினா உள்பட பலா் பாராட்டினா்.