புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோவில்பட்டி அருகே இளைஞா் கைது: புகையிலை பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

கோவில்பட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை, சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

வெங்கடாசலபுரம் விலக்கிலிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் உள்ள கடையின் பின்புறம் கிடந்த சாக்கு மூட்டைகளில் 160 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தன. அதன் அருகே நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் இளையரசனேந்தல், தெற்குத் தெரு இன்னாசிமுத்து மகன் சவுரிராஜ் (34) என்பதும், இப்பொருள்களை விற்பதற்காக பெங்களூரிலிருந்து வாங்கிவந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.