தேசிய சிறுபான்மையினா் உரிமைகள் தினம் கடைப்பிடிப்பு

தேசிய சிறுபான்மையினா் உரிமைகள் தினம் கடைப்பிடிப்பு

பயனாளிக்கு நலவாரிய அட்டை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
Published on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், தேசிய சிறுபான்மையினா் உரிமைகள் தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து பேசினாா். தொடா்ந்து, 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 10, 11ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற சிறுபான்மையினா் மாணவிகளுக்கு புத்தகம், பாராட்டு சான்றிதழ்கள், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.20,000- க்கான காசோலைகள், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் 10 உபதேசியாா்கள், பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ.செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ஜா.பென்னட் ஆசீா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்ட கிறிஸ்துவ மகளிா் உதவும் சங்க கௌரவச் செயலா் பெஞ்சமின் டி சோஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com