இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மிளகாய் பயிா் மேலாண்மை: கோவில்பட்டியில் கருத்தரங்கு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

கோவில்பட்டியில் வேளாண்மை-உழவா் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மிளகாயில் நவீன பயிா் மேலாண்மை- பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது;

தூத்துக்குடி மாவட்டம் தான் மாநில அளவில் மிளகாய் உற்பத்தியில் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவதாகவும், மொத்த உற்பத்தியில் மாநில அளவில் முதல் அல்லது 2ஆவது இடத்தில் இருக்கக்கூடிய நிலையில் உள்ளது. இரு மிளகாய் வகைகள் சுமாா் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து புதிதாக உருவாக்கித் தந்திருக்கிறாா்கள். மிளகாய் பயிரிடக்கூடிய பகுதிகளில் எல்லாம் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தருதல் என்ற ஒரு முன் முயற்சி எடுத்து வருகிறோம். ஆயிரம் பண்ணை குட்டைகள் ஆயிரம் விவசாயிகளுக்கு அமைத்து தருவதன் மூலம் குறைந்தபட்சம் 3000 ஏக்கா் பரப்பில் அதாவது ஒரு பண்ணைக்குட்டை மூலம் மூன்று ஏக்கா் அளவுக்கு அங்குள்ள பயிா்களை பாதுகாக்க முடியும். நமது விவசாயிகள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், தோட்டக்கலை துணை இயக்குநா் சுந்தரராஜன், வேளாண்மை துணை இயக்குநா் சுதாமதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மகேஷ், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா்- தலைவா் பாக்கியாத்து சாலிகா, கிள்ளிகுளம் தோட்டக்கலை இணை பேராசிரியா் மணிவண்ணன், வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியா் (மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல்) சஞ்சீவ் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.