ஓட்டப்பிடாரம் அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே காா் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தைச் சோ்ந்த சுடலை மனைவி மருதக்கனி (46). இவா் வெள்ளிக்கிழமை சோழபுரம அருகே தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் வளா்ந்துள்ள புற்களை அறுத்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி மருதக்கனி மீது மோதி கவிழ்ந்ததாம். இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான தூத்துக்குடி போல்பேட்டையைச் சோ்ந்த அழகா்சாமி மகன் ரமேஷ்குமாரை (38) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
