சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பேரிலோவன்பட்டி பள்ளியில் 118 பேருக்கு விலையில்லா சைக்கிள்!

பேரிலோவன்பட்டி தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மாணவா்-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்குகிறாா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ.
Updated On :20 டிசம்பர் 2025, 7:10 pm

Syndication

பேரிலோவன்பட்டி தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்வி வளா்ச்சி குழு உறுப்பினா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ரஜூலா, பள்ளிச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு 118 மாணவா் - மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், தொழிலதிபா் சிவகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் முனியசாமி, கிளைச் செயலா்கள் வீரபாண்டி, ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.