விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தூத்துக்குடி சி.எம்.பள்ளியில் 78 மாணவா் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:53 pm

தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளிச் செயலா் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ச.சங்கரேஸ்வரி வரவேற்றாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு, 78 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில், தொழிலதிபா் ஜீவன் ஜேக்கப், தி. ஆறுமுகம், தி. சோமநாதன், செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை கா.வள்ளியம்மாள் நன்றி கூறினாா்.