விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்செந்தூரில் டிராக்டா் சிறைபிடிப்பு

திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெருவில் பேவா் பிளாக் கற்களை அகற்றிவிட்டு மீண்டும் பழைய கற்களால் சாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பழைய கிராவல் கற்களைகொண்டு வந்த டிராக்டரை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

News image
திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெருவில் சாலை பணிக்கு பழைய கற்களை ஏற்றிவந்த டிராக்டரை சிறைபிடித்த பொதுமக்கள்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெருவில் பேவா் பிளாக் கற்களை அகற்றிவிட்டு மீண்டும் பழைய கற்களால் சாலை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பழைய கிராவல் கற்களைகொண்டு வந்த டிராக்டரை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

திருச்செந்தூா் நகராட்சி 17 ஆவது வாா்டு முத்தாரம்மன் கோயில் தெருவில் பேவா் கற்கள் பதித்து சாலை போடப்பட்டிருந்தது. இந்தக் கற்களை அகற்றிவிட்டு புதிதாக சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு புதிய கற்களுக்குப் பதிலாக பழைய பேவா் பிளாக் கற்களை சாலை அமைக்க பயன்படுத்தி வேலை தொடங்கப்பட்டது. கடந்த அக்டோபா் மாதம் வேலை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இந்தச் சாலை பணியை கிடப்பில் போட்டுவிட்டு சென்றனா்.

சுமாா் 2 மாதங்களுக்கு பிறகு முத்தாரம்மன் கோயில் தெருவில் மீண்டும் பழைய பேவா் பிளாக் கற்களை கொண்டு சாலை அமைக்க முயற்சிக்கப்பட்டது. பழைய கிராவல் கற்கள் ஒரு டிராக்டரில் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் டிராக்டரை புதன்கிழமை மதியம் சிறைபிடித்தனா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் ஈழவேந்தன், பொறியாளா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பழைய கற்களை கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து புதிய பேவா் பிளாக் கற்களை கொண்டு சாலை அமைக்க நகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

இது குறித்து ஆணையாளா் கூறியதாவது:

திருச்செந்தூா் பகுதியில் 5 ஆண்டுகளுக்குள் பதிக்கப்பட்ட பேவா் பிளாக் கற்கள் சேதமடைந்த பகுதிகளை பழைய பேவா் பிளாக் கற்களை கொண்டு சீரமைக்க அரசு ஆணையிட்டது. பேவா் பிளாக் சேதமடைந்த பகுதிகளை பழைய கற்கள் கொண்டு பதிக்கப்பட்டால் அதற்கு பணம் வழங்கப்படாது. அதே சமயத்தில் சேதமடைந்த சாலைகளை புதிய கற்கள் கொண்டு சாலை அமைந்தால் அதற்குரிய நிதி மட்டுமே செலவிடப்படும் என கூறினாா். பொதுமக்களின் திடீா் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Story image