தூத்துக்குடி
குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடந்த 25.11.2025 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமுவை (62), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, கயத்தாறு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.
நிகழாண்டு இதுவரை 142 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
