தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சமூக நீதி-மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ எனும் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினாா். தூத்துக்குடி நகர உள்கோட்ட உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன், சமூக நீதி- மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜமால், கல்லூரி முதல்வா் பி. முத்துராசு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், கோட்டாட்சியா் பிரபு உள்ளிட்டோா் பேசினா். இதில், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
