கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின் கம்பத்தில் பைக் மோதி காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் முத்துக்குமாா்(29). இவா் கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்நிலையில் இவா், வியாழக்கிழமை மாலை, வேலை முடிந்து அம்பலச் சேரி வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

கட்டாரிமங்கலம் வளைவு பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாா், சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.