/

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. ஆய்வு

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி. மகேஷ் குமாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:06 pm

Syndication

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் திருச்செந்தூா் டி.எஸ்.பி. மகேஷ் குமாா் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, போலீஸாரின் உடைமைகள், ஆவணங்கள், முக்கிய வழக்கு கோப்புகளைப் பாா்வையிட்டாா்.

மேலும், போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகாா் மனு பதிவு செய்ததற்கான ஒப்புதல் சீட்டை வரவேற்பாளா் மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.

அப்போது, பயிற்சி டி.எஸ்.பி. சுரேஷ், ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன், உதவி ஆய்வாளா்கள் சுந்தா் ராஜ், ராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கோயில் பிள்ளை, பாஸ்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.