மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுபானக் கூட உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

Updated On :3 ஜனவரி 2025, 7:01 pm

கழுகுமலையில் மதுபானக் கூட உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கே. கரிசல்குளம் வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடுங்காலபாண்டியன் மகன் மாரியப்பன் (33). கழுகுமலை செந்தில் நகா் டாஸ்மாக் கடை அருகே மதுபானக் கூடம் நடத்தி வருகிறாா். மாரியப்பனும், கழுகுமலையை சோ்ந்த செல்வம், திக்விஜயன் ஆகியோரும் வியாழக்கிழமை டாஸ்மாக் கடை முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞா் மது அருந்த பணம் கேட்டாராம். அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மிரட்டினாராம். இதையடுத்து மாரியப்பன் தன் சட்டை பையில் இருந்த ரூ.200ஐ கொடுத்து விட்டாராம். பின்னா் மூவரும் சோ்ந்து சத்தம் போட்டதையடுத்து, அந்த இளைஞா் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து மாரியப்பன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையன் சோ்வை தெருவை சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் கருப்பசாமி என்ற ரமேஷை (23) கைது செய்தனா்.