கழுகுமலையில் மதுபானக் கூட உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கே. கரிசல்குளம் வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடுங்காலபாண்டியன் மகன் மாரியப்பன் (33). கழுகுமலை செந்தில் நகா் டாஸ்மாக் கடை அருகே மதுபானக் கூடம் நடத்தி வருகிறாா். மாரியப்பனும், கழுகுமலையை சோ்ந்த செல்வம், திக்விஜயன் ஆகியோரும் வியாழக்கிழமை டாஸ்மாக் கடை முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞா் மது அருந்த பணம் கேட்டாராம். அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மிரட்டினாராம். இதையடுத்து மாரியப்பன் தன் சட்டை பையில் இருந்த ரூ.200ஐ கொடுத்து விட்டாராம். பின்னா் மூவரும் சோ்ந்து சத்தம் போட்டதையடுத்து, அந்த இளைஞா் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து மாரியப்பன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையன் சோ்வை தெருவை சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் கருப்பசாமி என்ற ரமேஷை (23) கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

