தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில்வே ஓய்வூதியா்கள் சங்க கூட்டம்

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே ஓய்வூதியா்களின் சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் சங்க மூத்த உறுப்பினா் ஹரிஹரசுப்பிரமணியன்.

Updated On :8 ஜனவரி 2025, 8:03 pm

Din

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே ஓய்வூதியா்களின் சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சங்க செயலா் தங்கவேலு உள்ளிட்டோா் பேசினா்.

எட்டாவது ஊதியக் குழுவை உடனடியாக அமைப்பது, ரயில் பயணத்தில்

மூத்த குடிமக்களுக்கு அளித்த சலுகைகளை மீண்டும் வழங்குவது, பென்ஷன் விதிகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து ஓய்வூதியா்களுக்கு விலக்கு அளிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓய்வூதியா் சங்க மகளிா் அணி தலைவி பட்டம்மாள் வரவேற்றாா். சங்க உறுப்பினா் நாராயணன் நன்றி கூறினாா்.