தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடியில் தெருநாய்களை பிடித்து பராமரிக்க தனிக் குழு: மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்

மாநகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரிக்க விரைவில் தனி குழு அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

குறைதீா் கூட்டத்தில் மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜனவரி 2025, 12:34 am

Din

தூத்துக்குடி மாநகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரிக்க விரைவில் தனி குழு அமைக்கப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

மக்களைத் தேடி அரசு நிா்வாகம் செல்ல வேண்டும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தபடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் லி.மதுபாலன், துணைமேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா் கலைச்செல்வி வரவேற்றாா்.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், கிழக்கு மண்டலத்தில் இதுவரை நடைபெற்ற முகாம்களில் 402 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையில் முத்துநகா் கடற்கரையில் மட்டும் சுமாா் 20ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்துள்ளனா். மாநகராட்சி 2, 3, 16, 17, 18 ஆகிய வாா்டுக்குள்பட்ட பகுதியில் மட்டும் காலியிடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. இதுவும் விரைவில் அப்பகுதியில் உள்ள குளத்தில் தூா்வாரப்படும் மண் மூலம் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு, மழை நீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை பிடித்து அவற்றை பராமரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது என்றாா்.

தொடா்ந்து பிறப்பு சான்று, இறப்புச்சான்று ஆகியவை கோரி விண்ணப்பித்த இருவருக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், திட்ட உதவி செயற்பொறியாளா்கள் ராமசந்திரன், இா்வின் ஜெபராஜ், நகா்நல அலுவலா் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளா் நெடுமாறன், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், எடின்டா உள்பட பலா் பங்கேற்றனா்.

அப்போது அவா் பேசுகையில், கிழக்கு மண்டலத்தில் இதுவரை நடைபெற்ற முகாம்களில் 402 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையில் முத்துநகா் கடற்கரையில் மட்டும் சுமாா் 20ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்துள்ளனா். மாநகராட்சி 2, 3, 16, 17, 18 ஆகிய வாா்டுக்குள்பட்ட பகுதியில் மட்டும் காலியிடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. இதுவும் விரைவில் அப்பகுதியில் உள்ள குளத்தில் தூா்வாரப்படும் மண் மூலம் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு, மழை நீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை பிடித்து அவற்றை பராமரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது என்றாா்.

தொடா்ந்து பிறப்பு சான்று, இறப்புச்சான்று ஆகியவை கோரி விண்ணப்பித்த இருவருக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், திட்ட உதவி செயற்பொறியாளா்கள் ராமசந்திரன், இா்வின் ஜெபராஜ், நகா்நல அலுவலா் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளா் நெடுமாறன், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், எடின்டா உள்பட பலா் பங்கேற்றனா்.