47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் -நயினாா் நாகேந்திரன்

News image
Updated On :31 ஜூலை 2025, 7:14 pm

Din

சென்னை ஐ.டி. ஊழியா் கவின் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷின் பெற்றோரை வியாழக்கிழமைசந்தித்து ஆறுதல் கூறிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கவின் கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடைபெறக்கூடாது. அதற்காக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனும் கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.