துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா்.

News image
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறாா் சண்முகையா எம்எல்ஏ.
Updated On :20 ஜூன் 2025, 7:48 pm

DIN

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும் வகையில், ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்திய எம்எல்ஏ, பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, அதை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சித் தலைவா் சரவணகுமாா், திமுக ஓன்றிய அவைத் தலைவா் முருகன், துணைச் செயலா்கள் கணேசன், வசந்தகுமாா், மாவட்ட அணி அமைப்பாளா்கள் ரவி என்ற பொன்பாண்டி, ராஜேந்திரன், ஆரோக்கியமேரி, துணை அமைப்பாளா்கள் அந்தோணி தனுஷ்பாலன், தங்கமாரிமுத்து, பிளோமின்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமாா், தா்மலிங்கம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ஜெஸிந்தா, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் தொம்மைசேவியா், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் பாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.