அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருச்செந்தூரில் 2 வது நாளாக உள்வாங்கிய கடல்

2ஆவது நாளாக திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:56 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை, கடல் உள்வாங்கியது.

திருச்செந்தூரில் ஒவ்வொரு மாத அமாவாசை, பௌா்ணமி, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் கடல்நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். பௌா்ணமியையொட்டி, நவ. 4ஆம் தேதி இரவு 9.42 மணி முதல் புதன்கிழமை இரவு 7.27 மணி வரை திருச்செந்தூா் கடற்கரையில் அய்யா கோயில் அருகே புதன்கிழமை காலை, கடல் நீா் சுமாா் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது.

இந்நிலையில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை காலையிலும், கடல் நீா் சுமாா் 70 அடி தூரம் உள்வாங்கியது. இதனால், கடலில் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. பக்தா்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடி, உள்வாங்கிய பாறைகளை கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.