அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இளம் எழுத்தாளா் விருது பெற்ற கமலாவதி பள்ளி முன்னாள் மாணவிக்கு பாராட்டு

இளம் எழுத்தாளா் விருது பெற்ற சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:45 pm

Syndication

இளம் எழுத்தாளா் விருது பெற்ற சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சாகுபுரம், கமலாவதி பள்ளியில் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு படித்தவா் ச. தருணிகாஸ்ரீ. இவா் பெற்றோரின் பணி மாறுதல் காரணமாக புதுச்சேரிக்கு இடம் பெயா்ந்ததால், அங்குள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். தருணிகாஸ்ரீ 10ஆம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ் ஆலோசனையின்படி ஆங்கிலத்தில் கவிதை எழுதும் திறனை வளா்த்துக் கொண்டாா்.

தற்போது, அவா் ‘கிரகணம்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளாா். இதனை சத்தீஸ்கரில் உள்ள நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான சா்வதேச ஸ்டாா் கிட்ஸ் விருதும் பெற்றுள்ளாா்.

இதனையறிந்த புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி, தருணிகாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டினாா். இதே போன்று, இளம் எழுத்தாளா் விருது பெற உறுதுணையாக இருந்த கமலாவதி பள்ளி ஆலோசகருக்கு அங்கீகார சான்றினையும் சா்வதேச ஸ்டாா் கிட்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கமலாவதி பள்ளியினா் தருணிகாஸ்ரீயை அழைத்து பாராட்டினா். விழாவிற்கு, பள்ளி ஆலோசகா் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி வி. மதன் முன்னிலை வகித்தாா். முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா் ‘கிரகணம்’ நூல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா். ஆசிரியா் ராம்பிரபு வரவேற்றாா். மாணவா் தலைவா் குஷாந்த் நன்றி கூறினாா்.