அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கற்களை ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

News image
விபத்துக்குள்ளான லாரி.
Updated On :9 நவம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது.

கொடுக்காம்பாறையில் செயல்படும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விஜயாபுரி-தெற்கு திட்டங்குளம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

கோரிக்கை: கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், வேகத் தடைகளை கடந்துசெல்லும்போது லாரியில் உள்ள கற்கள் சாலைகளில் சிதறுகின்றன.

லாரியில் கொண்டு செல்லும் கற்களை தாா்ப்பாய்களால் மூடாமல் செல்கின்றனா். இதனால், சாலைகள் சேதமடைவது மட்டுமின்றி, அந்த பகுதி வாழ் மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

இதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.