வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோவில்பட்டியில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை, சாலைப் பணியாளா் சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :10 நவம்பர் 2025, 8:41 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை, சாலைப் பணியாளா் சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணைப்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞா்களை சாலைப் பணியாளா்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலச் செயலா் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி, நீதித் தராசை கையிலேந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.