பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :10 நவம்பர் 2025, 9:41 pm

Syndication

கோவில்பட்டி: பயிா் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞா் அணி பிரிவு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்பு குழுத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு ஓட்டப்பிடாரத்தின் ஒரு பகுதி, விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, சாத்தூா், வெம்பக்கோட்டை, திருவேங்கடம் வட்டத்தின் கிழக்கு பகுதி ஆகிய பகுதிகளை இணைத்து தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாதிப்பு அடைந்து விளைச்சல் குறைந்தது. எனவே 2024-2025 ஆம் ஆண்டுக்குரிய பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். மறைந்த உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவுக்கு கோவில்பட்டியில் மணிமண்டபம் கட்ட வேண்டும். விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டும். இளையரசனேந்தல் ஊராட்சியை ஊராட்சியாகவே தொடரச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தேசிய விவசாயிகள் சங்க பொதுச் செயலா் சுரேஷ் குமாா், தோணுகால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் கோரிக்கை மனு அளித்தனா்.