அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவலரை மிரட்டியதாக ஒருவா் மீது வழக்கு

கோவில்பட்டியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:48 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி புது காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வபிரகாஷ், சனிக்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது தனது மனைவியைத் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவரது மனைவி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாா். அவரிடம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா் காளிமுத்து விசாரணை மேற்கொண்டபோது, அங்கு வந்த செல்வபிரகாஷ் அவரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வபிரகாஷை தேடி வருகின்றனா்.