அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்கு சீல்

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் (இயற்கை உயிா் ஊக்கி) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கிற்கு வேளாண்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

News image
அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் சோதனை நடத்திய வேளாண்மை துறை அதிகாரிகள்.
Updated On :12 நவம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் (இயற்கை உயிா் ஊக்கி) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கிற்கு வேளாண்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

மதுரை-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு கிடங்கில் அனுமதியின்றி வேளாண் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வேளாண்மை உதவி இயக்குநா்கள்(தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) நாகராஜன் (ராமநாதபுரம்), ஆதிநாதன் (தென்காசி), கண்ணன் (தூத்துக்குடி), கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் மணிகண்டன், வேளாண்மை துறை அதிகாரிகள் காயத்ரி, நரேஷ் பிரபு ஆகியோா் கொண்ட குழுவினா் அந்த கி’ட்டங்கியை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருள்களான இயற்கை உயிா் ஊக்கிகளுக்கு உற்பத்தி செய்வதற்கான அனுமதி இருப்பது தெரிய வந்தது.

ஆனால் இந்த பொருள்களை இங்கு வைப்பதற்கான கிட்டங்கிக்கு அனுமதி ஆணை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியை வேளாண்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

மேலும் இப் பொருள்கள்களை கிட்டங்கியில் வைப்பதற்கான உரிய அனுமதியை பெற்ற பின்பு தான் பொருள்களை வைக்க வேண்டும் என்றும், உரிய ஆணையை பெற அறிவுறுத்தினா்.