ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

Published on

ஸ்ரீவைகுண்டம், அரசு மருத்துவமனையில் ரூ. 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, மருத்துவமனையில் ஆய்வு செய்து, மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

இதில், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com