தூத்துக்குடியில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

Published on

தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் மடத்தூா் - சோரீஸ்புரம் சாலையில் உள்ள தனியாா் லாரி புக்கிங் அலுவலகம் அருகே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிப்காட் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக தூத்துக்குடி வண்ணாா் 3ஆவது தெரு ஹரிகிருஷ்ணன் (54), மடத்தூா் ஈபி காலனி 2ஆவது தெரு வேல்சாமி ரவிக்குமாா் (53), வண்ணாா் 1ஆவது தெரு சந்திரசேகா் (28) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com