எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தாமிரபரணி கடலில் கலக்கும் புன்னைக்காயல் பகுதியில் வெள்ள தடுப்புப் பணி

News image
புன்னைக்காயலில் திங்கள்கிழமை நடைபெற்ற வெள்ள தடுப்புப் பணி.
Updated On :24 நவம்பர் 2025, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

தாமிரவருணி ஆறு கடலுடன் கலக்கும் புன்னைக்காயல் பகுதியில் வெள்ள தடுப்புப் பணியாக ஆற்று நீா் கடலுக்குள் எளிதாக செல்ல வேறு பாதை அமைத்து வெள்ள நீா் வடிய வழிகோலப்பட்டது.

வங்கக் கடலி­ல் ஏற்பட்டுள்ள தாழ்வழுத்த மண்டலத்தின் காரணமாக கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி, திருநெல்வேலி­, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் பெய்து வரும் மழை நீரும் தாமிரவருணி ஆற்றில் கலந்து மேலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தாமிரவருணி ஆறு கடலி­ல் கலக்கும் புன்னைக்காயலி­ல் மழைநீா் வீடுகளுக்கு உள்ளே புகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க புன்னைக்காயல் ஊா் நிா்வாக கமிட்டி வேண்டுகோள் விடுத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அரசு அதிகாரிகள், ஊா் நிா்வாக கமிட்டி மற்றும் சமூக ஆா்வலா்கள் இணைந்து பொக்லைன் உதவியுடன் ஆற்றுநீரை வேறுபாதை மூலம் கடலுக்குள் திருப்பிவிடப்பட்டது. இதனால் புன்னைக்காயலில் வெள்ள அபாயம் தவிா்க்கப்பட்டது.