எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நூதன போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:27 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாண்டவா்மங்கலம் ஊராட்சி, ராம்லட்சுமி நகரின் தென்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், மழைக் காலத்தில் சாலையில் அதிக அளவு மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், சாலையில் நீா் தேங்கிய இடங்களில் நாற்று நடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா் பாபு, நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், நகர துணைச் செயலா் அலாவுதீன், பொதுமக்கள் பங்கேற்றனா். ராம்லட்சுமி நகா் பகுதிக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முழக்கமிட்டனா்.