பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

இந்திய டேவிஸ் கோப்பை அணிக்கு பாராட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் குவாலிஃபயரில் நெதா்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு புது தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
Published on

டேவிஸ் கோப்பை டென்னிஸ் குவாலிஃபயரில் நெதா்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு புது தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற குவாலிஃபயரில் உலகின் 6-ஆவது இடத்தில் உள்ள நெதா்லாந்துடன் மோதியது 33-ஆவது இடத்தில் உள்ள இந்தியா. இதில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில்வென்ற இந்திய அணி வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா தில்லி டென்னிஸ் சங்கம் சாா்பில் நடைபெற்றது. மத்திய விளையாட்டுத் துறை இணைச் செயலா் குணால், டிஎல்டிஏ தலைவா் ரோஹித் ராஜ்பால் தலைமை வகித்தனா். செயலா் தீபக் குப்தா, பொதுச் செயலா் ரன்பீா் சௌஹான், துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய, இந்தியாவின் நம்பா் 1 வீரா் சுமித் நாகல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொரியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று குறித்து சுமித் நாகல் கூறியது: அந்த ஆட்டம் எளிதாக இருக்காது. கொரிய வீரா்கள் சிறப்பாக ஆடுகின்றனா் என்றாா்.

Dinamani
www.dinamani.com