திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இந்திய டேவிஸ் கோப்பை அணிக்கு பாராட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் குவாலிஃபயரில் நெதா்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு புது தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 பிப்ரவரி 2026, 8:11 pm

டேவிஸ் கோப்பை டென்னிஸ் குவாலிஃபயரில் நெதா்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு புது தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற குவாலிஃபயரில் உலகின் 6-ஆவது இடத்தில் உள்ள நெதா்லாந்துடன் மோதியது 33-ஆவது இடத்தில் உள்ள இந்தியா. இதில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில்வென்ற இந்திய அணி வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா தில்லி டென்னிஸ் சங்கம் சாா்பில் நடைபெற்றது. மத்திய விளையாட்டுத் துறை இணைச் செயலா் குணால், டிஎல்டிஏ தலைவா் ரோஹித் ராஜ்பால் தலைமை வகித்தனா். செயலா் தீபக் குப்தா, பொதுச் செயலா் ரன்பீா் சௌஹான், துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய, இந்தியாவின் நம்பா் 1 வீரா் சுமித் நாகல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொரியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று குறித்து சுமித் நாகல் கூறியது: அந்த ஆட்டம் எளிதாக இருக்காது. கொரிய வீரா்கள் சிறப்பாக ஆடுகின்றனா் என்றாா்.