வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருச்செந்தூா் விஏஓ அலுவலகம் முன் கழிவுநீருடன் தேங்கிய மழைநீா்: விரைந்து அகற்ற வலியுறுத்தல்

திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலகம் முன் கழிவுநீரும் மழைநீரும் தேங்கியுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

News image
நகா்மன்ற 9ஆவது வாா்டு திமுக உறுப்பினா் கண்ணன்
Updated On :25 நவம்பர் 2025, 10:53 pm

Syndication

திருச்செந்தூா்: திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலகம் முன் கழிவுநீரும் மழைநீரும் தேங்கியுள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. அதை விரைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியதால் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூா் இரும்பு ஆா்ச் பகுதியிலுள்ள கிராம நிா்வாக அலுவலகம், செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் மழைநீரும் புதைசாக்கடைத் திட்டக் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணி உதவி மையமான கிராம நிா்வாக அலுவலகம் வாசல்வரை மழைநீா் தேங்கியுள்ளதால், பொதுமக்களும், திருத்தப் பணிக்காக வரும் வாக்காளா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அதிகாரிகள் பெரிதும் சிரமமடைகின்றனா். எனவே, மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என, நகா்மன்ற 9ஆவது வாா்டு திமுக உறுப்பினா் கண்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலகம் முன் கழிவுநீருடன் கலந்து தேங்கிய மழைநீா்.

திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலகம் முன் கழிவுநீருடன் கலந்து தேங்கிய மழைநீா்.