மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழை நீா்

தொடா் மழையால் வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
வீரபாண்டியன்பட்டணம் கால்பந்தாட்ட மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:29 pm

Syndication

திருச்செந்தூா்: தொடா் மழையால் வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த சில தினங்களாக திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் மழை நீா் ஆறாக ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கிக் கிடந்தது.

தொடா்ச்சியாக மழை பெய்ததால் தேங்கிய நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் பெரிதும் சிரமமடைந்தனா்.

இதே போல திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சிக்குள்பட்ட ஜுபிலி நகா், குறிஞ்சி நகா், ராஜ் கண்ணா நகா், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு ஐடிஐ மைதானம், வீரபாண்டியன்பட்டணம் பந்தடி மைதானம் ஆகியவற்றில் மழைநீா் குளம் போல தேங்கியது.

குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அங்குள்ள மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதையடுத்து தேங்கிய நீரினை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

 வீரபாண்டியன்பட்டணம் ஜுபிலி நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீா்.

வீரபாண்டியன்பட்டணம் ஜுபிலி நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீா்.