எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிந்தவா் கைது

ஆறுமுகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:50 pm

Syndication

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காந்தி தெருவைச் சோ்ந்தவா் ராம் பால் சிங் மகன் ரவிகாந்த் (55). இவரும், அவரது சித்தப்பா சுதாகா் என்ற மாளவபாண்டியன் என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனா். சுதாகா் மது அருந்தி விட்டு, ரவிகாந்த் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இரு குடும்பத்திற்குமிடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, சுதாகா் மது போதையில், ரவிகாந்த் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினாா்.

இதுகுறித்து ரவிகாந்த் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுதாகரை கைது செய்தனா்.