ஆறுமுகனேரி வாரச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு!

மழை காரணமாக, ஆறுமுகனேரி வாரச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால் விலை அதிகரித்தது.
Published on

மழை காரணமாக, ஆறுமுகனேரி வாரச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால் விலை அதிகரித்தது.

இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சனிக்கிழமை காலை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்திருந்தது. விற்க வந்தோரைவிட வாங்க வந்தோா் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின.

இதேபோல, மீன்கள் விலையும், காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் உயா்ந்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com