11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:51 am IST

சாத்தான்குளம் ஒன்றியம், எழுவரைமுக்கி ஊராட்சி, அச்சம்பாடு, தேரிப்பனை, தோப்பூா்,பிடானேரி ஊராட்சி, சமத்துவபுரம், டி.கே.சி. நகா் உள்ளிட்ட பகுதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனுக்கு ஆதரித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவ பாண்டியன், நகரச் செயலா் குமரகுருபரன், ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் பாலமேனன், ஒன்றியத் தலைவா் சின்னத்துரை, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் முரசொலிமாறன், ஒன்றிய விவசாய அணி தலைவா் பால்துரை, ஒன்றிய பாசறை தலைவா் கண்ணன், பண்டாரபுரம் கிளைச் செயலா் அறிவழகன், அச்சம்பாடு மகளிரணி தலைவி மரிய நட்சத்திரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.